வனவியல் தொழில்நுட்பங்கள்
நாற்றங்கால் தொழில்நுட்பம்

அதிக அளவில் காடுகளை வளர்ப்பதற்கு நாற்றங்கால் அமைப்பதன் தேவை

நாட்டின் மூன்றில் ஒரு பங்குள்ள பூகோள பகுதிகள் வனங்கள் / மரங்களால் இருக்க வேண்டும் என்று தேசிய வனக் கொள்கை வலியுறுத்துகிறது. இதை முன்னிட்டு 10 வது ஐந்தாண்டு கால திட்டத்தில் அணுகுமுறை படிவமாக 25 சதவிகித நிலங்கள் புத்தாண்டு கால திட்ட இறுதியில் வனங்களாகவோ / மரங்களாலோ இருக்குமாறு மற்றும் பதினொன்றாம் திட்ட காலத்தின் இறுதியில் இது 33 சதவிகிதமாக இருக்குமாறு இலக்கை வைத்தனர். இத்திட்டம் நீர்வளம் உள்ள பகுதிகளில் நவீன நாற்றங்கால்கள் அமைத்து தரமான நாற்றுகள் அளிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. நிரந்தரமாக அழிந்து வரும் வனவளங்கள் மற்றும் அதிகரித்து வரும் காடு அழித்தல்கள் போன்றவைகளை முன்நிறுத்தி, சமுதாய மக்களையும் சுறுசுறுப்பாக காடு வளர்ப்பு திட்டங்களில் பங்கு பெற வைத்தால் தான் இத்திட்டங்கள் வெற்றி பெரும். கிராம சமூகம் நேரடியாக பயன் பெரும் வரை சிறிய ஊக்குவிப்பு பணம் அவர்களுக்கு வழங்கப்படுவது நன்றாக அறிந்த விஷயமாகும். கிராமப்புரங்களில் நாற்றங்கால்கள் அமைப்பதற்கு கடனுதவி செலவுகள் மூலம் எளிய மற்றும் சரியான நேரத்தில் நாற்றுகள் கிடைக்குமாறு செய்வதன் மூலம் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். சமுதாய மக்களை வன நாற்றங்கால்கள் அமைப்பதற்கு ஈடுபடுத்துவது, எதிர்காலத்தில் வன மறுமலர்ச்சி திட்டங்களில் முக்கிய அம்சமாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள நாற்றங்கால் அமைக்கும் நிதியுதவி முறை பெரிய அளவில் வனம் வளர்ப்பதற்கு பேருதவியாக இருக்கும்.